இராசேந்திர சோழரின் பிறந்தநாள்
தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என போற்றப்பட்ட பெரும்பாட்டன் இராசேந்திர சோழர் பிறந்த நாள் ❣️ ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஆசிய கண்டத்தின் பெரும்பகுதியை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்த கோமகன்! கோப்பரகேசரி என்ற பட்டத்தோடு அரியணையேறிய சோழர்குலத் திலகம். வங்கக்கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம் போன்ற இடங்களில் எல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் ஒரு வேங்கையைப் போன்று அலைகடலில் சீறிப் பயணித்து வெற்றிக்கொடி நாட்டியவன். மாமன்னர் இராசராச சோழருக்குப் பிறகு மிகப் பெரியளவில் படைத்திரட்டி, கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்த பேரரசர் இராசேந்திர சோழர் மட்டுமே. சீறும் அலைகடல் மீது பல கலம் செலுத்தியவன் என்று அவன் மெய்கீர்த்தி பறைசாற்றுகிறது. இராசேந்திர சோழர் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை நாச்சியார் என்கிற தேவரடியாரை விரும்பினான். பேரரசரின் பிறந்தநாளான திருவாதிரை நாட்களில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோவிலுக்கு வருகிற சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்களுக்கு அமுது படைப்பதற்காக 72 வேலி நிலத்தை தானமாகக் கொடுத்த